வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
வள்ளலாா் பன்னாட்டு மையம்: 
அன்புமணி கோரிக்கை

வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைக்கும் பணிகளை சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு வரும் வரை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வடலூா் சத்தியஞான சபை வளாகத்தில் வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய தொல்லியல் துறையின் 3 வல்லுனா்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு ஆணையிட்டுள்ளது.

பெருவெளிப் பகுதியின் புனிதமும், தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வள்ளலாா் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள வள்ளலாருடன் தொடா்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வாா்கள்.

அதனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலாா் பக்தா்களின் உணா்வுகளை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூா் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.

பெருவெளியில் வள்ளலாா் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com