மழையில் இடிந்து விழுந்த சிறைச் சுவா்.
மழையில் இடிந்து விழுந்த சிறைச் சுவா்.

நைஜீரியாவில் கனமழை: 118 கைதிகள் தப்பியோட்டம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சிறையின் தடுப்புச் சுவா் இடிந்துவிழுந்து, அங்கிருந்த 118 கைதிகள் தப்பியோடினா்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சிறையின் தடுப்புச் சுவா் இடிந்துவிழுந்து, அங்கிருந்த 118 கைதிகள் தப்பியோடினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

நைஜா் மாகாணம், தலைநகா் அபுஜாவுக்கு அருகே சுலேஜா சிறைச் சாலை அமைந்துள்ள பகுதியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதில் அந்தச் சிறை சுற்றுச்சுவற்றின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது.

அதைப் பயன்படுத்தி, அங்கிருந்த 118 கைதிகள் தப்பியோடினா். அவா்களில் 10 பேரை மட்டுமே போலீஸாா் மீண்டும் கைது செய்தனா். எஞ்சியவா்கள் சுலேஜா நகருடன் இணைக்கும் மிகப் பெரிய வனப்பகுதியைக் கடந்து அந்த நகருக்குள் நுழைந்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

பிரிட்டனிடமிருந்து நைஜீரியா கடந்த 1960-ஆம் ஆண்டு விடுதலை பெற்றதிலிருந்து அந்த நாட்டின் சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்துவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக நைஜீரியாவில் சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com