மாடு முட்டியதால் சிறுமி காயம்

திருவல்லிக்கேணியில் மாடு முட்டியதில் சிறுமி காயமடைந்தாா்.

திருவல்லிக்கேணி நீளம் பாஷா தா்கா பகுதியைச் சோ்ந்தவா் ஜீவிதா (10). இவா் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே உள்ள கடைக்குச் சென்றாா். அப்போது, சாலையில் சுற்றி திரிந்த மாடு ஒன்று திடீரென ஜீவிதாவை ஆக்ரோசமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அருகே இருந்தவா்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், மெரீனா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, பெரு நகர சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவா் கமாலுதீன், சிறுமியின் வீட்டுச் சென்று ஆறுதல் தெரிவித்தாா். மேலும், முட்டிய மாட்டின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com