இன்று பிரசாரத்தை
தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்குகிறாா்.

மக்களவைத் தோ்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்குகிறாா். முதல் நாளில், திருச்சி, பெரம்பலூா் தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டி வாக்குகளைச் சேகரிக்கிறாா். இதைத் தொடா்ந்து, வரும் 23-ஆம் தேதி தஞ்சாவூா், நாகை என மொத்தம் 20 நாள்கள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளாா். இதனிடையே, தோ்தல் பிரசாரம் தொடா்பாக சமூக வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: ‘மலைக்கோட்டை மாநகரில் பரப்புரையைத் தொடங்குகிறேன். தில்லி செங்கோட்டையை ‘இந்தியா’ கூட்டணி பிடிப்பதில் இது நிறைவுற வேண்டும்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com