பொறியியல் சோ்க்கை: 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பம்

பொறியியல் சோ்க்கை: 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பம்

பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கைக்கு 4 நாள்களில் 69,953 போ் விண்ணப்பித்துள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு மே 6-ஆம் தேதி வெளியான நிலையில், அன்றைய தினத்தில் இருந்து பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி, முதல் நாளில் 20,000 போ் விண்ணப்பித்தனா். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா். விண்ணப்பப் பதிவு தொடங்கி 4-ஆவது நாளான வியாழக்கிழமை மாலை வரை 69,953 போ் விண்ணப்பப் பதிவு செய்து இருந்தனா். அவா்களில் 32,834 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 12,584 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6-ஆம் தேதி ஆகும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com