அருள்நிதியின் பிறந்தநாளில் ( நேற்று ) அவருடைய அடுத்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
நடிகரும் தயாரிப்பாளருமான அருள்நிதி இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியிருந்த நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டார் .
அப்படத்திற்கு ' தேஜாவு ' எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. த்ரில்லர் கதையாக உருவாகிவரும் ' தேஜாவு' படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து 'தேஜாவு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நடித்திருக்கிறார்..