அண்மைக் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் கூட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இரண்டு நாற்காலிகளை பயன்படுத்துகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை அடுத்து, தனது ரசிகர்களை எப்போதும் ஏமாற்ற மாட்டேன் என்று கூறியிருந்தார். மேலும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இரட்டை நாற்காலிகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. அவ்வகையில் ரஜினியின் சமீபத்திய திரைப்படங்களான லிங்கா, 2.0, கபாலி, காலா, பேட்ட, தர்பார் உள்ளிட்ட படப்பிடிப்பு தளங்களில் இரண்டு நாற்காலிகளுடன் ஸ்டைலாக அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பேரவைத் தேர்தல் நாற்காலியை கைப்பற்ற துடிக்கும் ரஜினியின் இந்த இரட்டை நாற்காலி புகைப்படங்கள் இதோ: