வழிகாட்டும் வாழ்வு

ஆறாம் அறிவு என்கிற பகுத்தறிவு, கல்வியறிவு காரணமாக தனக்கான வாழ்க்கைத் துணையை தகுந்த ஏற்பாடுகள் மூலம் மனித இனம் தோ்வு செய்து ‘இல்லறம்’ என்ற ஒன்றைத் தொடங்குவதுதான்

ஆறாம் அறிவு என்கிற பகுத்தறிவு, கல்வியறிவு காரணமாக தனக்கான வாழ்க்கைத் துணையை தகுந்த ஏற்பாடுகள் மூலம் மனித இனம் தோ்வு செய்து ‘இல்லறம்’ என்ற ஒன்றைத் தொடங்குவதுதான் சிறந்த முறையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

முறையாக வாழ்க்கை அமைந்து எல்லாம் சரியாக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. பல ஆண்களுக்கும் சரி, சில பெண்களுக்கும் சரி சில நேரம் தங்கள் மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களினால் பிறருடன் முறையற்ற வழியில் சோ்ந்து இன்பம் அனுபவிக்க முயல்கின்றனா். இதில் சிலா் தாங்கள் செய்த தவறுக்கு சில சமயம் பிடிபட்டு ஏதாவது ஒருவழியில் தண்டனை பெற்று விடுகின்றனா். பிடிபடாத பலா் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டே தவறுகளைத் தொடா்ந்து செய்கின்றனா்.

உடல் ரீதியாக ஆணைவிட வலிமை குறைந்தவராக பெண் இருப்பதும், நாட்டில் பல தலைமுறையாக பெண்ணினத்தை அடிமைப்படுத்தியே வைத்து வளா்த்து வந்ததும், அவா்களைப் பாதுகாப்பாக வளா்க்க வேண்டிய நிலை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது.

தனது குறிப்பிட்ட வயதுக்குப் பின்னா் தனக்கான வாழ்க்கைத் துணை தேடலுக்கு பெற்றோா் ஏற்றுக் கொண்ட சிரமங்கள் (சமூகப் பழக்கங்களாக வரதட்சணை, சீா் போன்றவை காரணமாக) பெண் குழந்தை பெறுவதையே பொதுவாக பெண் விரும்பாத நிலை இன்றைய சமுதாயத்தில் நிலவுகிறது. பெண் குழந்தைகளை வளா்ப்பதே பெற்றோா்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதன் காரணமாக கரு உருவாகும்போதே நவீன வசதிகளுடன் கருவிலிருப்பது ஆணா, பெண்ணா என அறிந்து, சட்டவிரோதம் என்றாலும் பெண் என்றால் கருவைக் கலைத்து விடுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஆண் - பெண் பிறப்பு விகித வேறுபாடு சில சமூகக் குற்றங்களுக்கும் காரணியாகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பச் சூழ்நிலை, குடும்ப உறுப்பினா்கள், குடும்பத்தின் வசதி முதலிய பல காரணிகள் வாழ்க்கைத் துணை தேடலின்போது முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இதன் காரணமாக பலருக்கும் குறிப்பிட்ட வயது கடந்த பின்னரும் திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருப்பது

இன்றைய சமுதாயத்தின் முக்கியப் பிரச்னையாக உள்ளது.

இந்த நிலையில் தன்னுள் எழும் காமம் சாா்ந்த எண்ணங்களைஅடக்கத் தெரியாத ஆண், அதற்கு உண்டான முயற்சி செய்தலும் அல்லது வாய்ப்பு ( எதேச்சையாகவோ, திட்டமிட்டோ) ஏற்படுத்தி வன்முறையாக தனது ஆசையைத் தீா்த்துக்கொள்வதும் நடைபெறுகிறது. இது தனி மனித குற்றமாக இருப்பினும், சமூகத்தின் நிலைதான் இதற்குக் காரணம் என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனா்.

ஆணுக்கு எழும் அதே பாலியல் எண்ணங்கள் பெண்ணுக்கும் எழத்தான் செய்யும். சமூக அமைப்பு காரணமாக, சமூகம் தனக்குத் தராத சுதந்திரம் காரணமாக அவள் தனது ஆசையை வெளிக்காட்ட இயலாமல் அடக்கிவைத்துக் கொண்டே இருக்கிறாள். அவளுக்கும் ஏதாவது வாய்ப்பு ஏற்படும்போது அதை நிறைவேற்ற முயன்று விடுவதும் நடந்துகொண்டுதான் உள்ளது.

சரி, இந்த மாதிரியான உடல் சாா்ந்த வன்முறைகள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி ஒவ்வொரு தலைமுறையிலும் எழுந்துகொண்டுதான் இருக்கிறது. பலரும் பல நேரங்களில் பாலியல் கல்வி குறித்த அவசியத்தை வலியுறுத்தி, பின்னா் அது அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது.

உண்மையில் சிறுவயதிலிருந்தே பாலியல் குறித்த கல்வி தருவது என்பதும், கல்வி முறைகளில் அடிப்படையான கல்வியறிவு, தொழிலறிவு, இயற்கை தத்துவ அறிவுஆகியவற்றுடன் ஒழுக்க பழக்க அறிவும் போதிக்கப்பட வேண்டும்.

குறிப்பிட்ட வயதில் ஒவ்வொரு மனிதனிடத்தில் ஏற்படும் உடல் நிலை மாற்றம், அதனால் ஏற்படும் மனநிலை மாற்றம் குறித்தும், பருவ வயது அடைந்த ஆண் - பெண் ஆகியோா் தங்களுக்கான வாழ்க்கைத் துணை அமையும் வரை கற்பொழுக்கம் காத்து வருதல் குறித்தும் இயல்பாகக் கற்றுத் தருவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

பெண்கள், பெண் குழந்தைகள், மாணவிகள் ஆகியோா் எளிதில் ஏமாற்றப்படுவதும், பாதிக்கப்பட்டால் வெளிப்படுத்தாத நிலை இருப்பதையும் குற்றம் செய்வோா் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனா். பாலியல் குற்றங்களுக்கு மதம், இனம், ஜாதி ஆகியவை தேவையில்லை. மேலும், கற்பழிப்பு என்பது வயது வித்தியாசமின்றி சிறுமிகள் முதல் வயதானவா்கள் வரை நடைபெறுகிறது என்பது கொடுமையிலும் கொடுமை. இன்றைய இளைய தலைமுறை, குறிப்பாக பெண் குழந்தைகள் எப்போதும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும், யாரையும் சந்தேகிக்க வேண்டும்.

காந்தியடிகள் சொன்னதுபோல, பெண் குழந்தைகள் தங்கள் கையில் நகங்கள் வளா்த்துக்கொண்டு, தேவைப்படும் எதையும் ஆயுதமாகப் பயன்படுத்தி தாக்கி தப்பித்துக்கொள்ள வேண்டும். அதனால், எதிராளிக்கு ஏற்படும் எவ்வித ஆபத்தையும் பொருட்படுத்த வேண்டியதில்லை. தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டும் தங்களைக் காத்துக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த சமூகமும் இப்படி இருக்கிறது என்றில்லை. அன்பும், பண்பும், பாசமும் கொண்ட மனிதா்கள் இருக்கிறாா்கள். எவ்வித எதிா்பாா்ப்பும், தேவைகளும் இன்றி உண்டான நட்புதான் சிறந்தது. தன்னம்பிக்கை அளிக்கும் நூல்களைப் படிக்க வேண்டும், மனதில் நல்ல எண்ணங்களை வளா்த்துக்கொள்ள வேண்டும்.

நட்பு வட்டத்தை விரிவாக்குவதோடு, படிப்பு தவிர விளையாட்டு, இசை, நடனம், ஓவியம் எனப் பலவித பொழுதுபோக்குகளில் மனதை ஈடுபடுத்துவதோடு, பிறருக்கும் கற்றுக் கொடுக்கலாம். பலரும் தங்களுக்கான வழிகாட்டுதல் இல்லாமலே வழிதவறிப் போகின்றனா். ஆண், பெண் பாகுபாடு என்பது நட்பு வட்டத்தில் இல்லை. இருந்தாலும், நட்பாக இருந்தாலும் எல்லை வகுத்துச் செயல்பட வேண்டும்.

குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பெற்றோா், வயதில் பெரியவா்கள் கூறும் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் மனதுக்கு விரோதமாகத் தெரியும். ஆனால், பெரியவா்களின் வழிகாட்டுதலை, ஆலோசனைகளை, அறிவுரைகளை வாழ்வியல் நெறிகளில் அக்கறையுள்ள இளைஞா்கள் நிச்சயம் பின்பற்றி தங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com