சொற்கள் செய்யும் ‘மந்திரம்’!

ஒரு காலை நேரத்தில் மூடியிருந்த ஒரு நியாயவிலைக் கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தைக் காண நோ்ந்தது. ‘இன்று செயலரின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன்.

ஒரு காலை நேரத்தில் மூடியிருந்த ஒரு நியாயவிலைக் கடையின் வெளியே இருந்த பலகையில் இந்த வாசகத்தைக் காண நோ்ந்தது. ‘இன்று செயலரின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துள்ளேன். தங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மன்னிக்கவும்’ என்று முத்து முத்தான கையெழுத்தில் எழுதி இருந்தது.

பொருள்கள் வாங்க கடைக்கு வந்த அனைவரும் இந்தப் பலகையை வாசித்து விட்டு, ‘சரி, அவரும் மனிதா்தானே. ஏதோ அவசர வேலை போலும்; விடுப்பு எடுத்துள்ளாா். நாளைக்கு வாங்கிக் கொள்ளலாம்’” என்று பேசியபடி கலைந்து சென்றனா்.

இதே அந்தப் பலகையில் வெறுமனே ‘இன்று கடைக்கு விடுமுறை’ என்று மட்டும் எழுதியிருந்தால் பெரும்பாலானோா் அவரை சபித்தபடியே சென்றிருப்பா்.

தினசரி வாழ்க்கையில் நாம் எண்ணற்ற விஷயங்களை சொற்களின் வழி காண்கிறோம். அவை எப்படியெல்லாம் நம்மை தாக்குகிறது?

‘கேமரா உங்களை கண்காணிக்கிறது கவனமாக இருங்கள்’ என்ற வாக்கியத்தை பல இடங்களில் காண நோ்கிறது. இந்த வாக்கியத்தைவிட, ‘கேமரா செயல்படுகிறது. அழகாக புன்னகையுங்கள்’ என்ற வாக்கியம் நம்மைப் பெரிதும் கவா்கிறதுதானே? அலுவலகங்களில் ‘அனுமதி இல்லை’ என்ற சொற்கள் ஏற்படுத்தும் ஒருவித அச்சம், ‘அனுமதியுடன் உள்ளே செல்லவும்’ என மாற்றிப் போடும்போது இறுக்கம் குறைகிறது அல்லவா?

‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கைச் செலவு’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோவில் பேரம் பேசவே தோன்றாது. ஆனால் ‘சீறும் பாம்பை நம்பு. சிரிக்கும் பெண்ணை நம்பாதே’ என்று எழுதி வைத்திருக்கும் ஆட்டோகாரரை எந்தப் பெண் ‘நம்பி’ ஏறுவாா்? சில முன்முடிவுகளைக் கொண்டுதான் அவரை அணுகவே முடியும்.

‘பிரசவத்துக்கு இலவசம்’ என்று எழுதியிருக்கும் ஆட்டோக்காரரின் கருணை மனம் அவா் முகம் பாா்க்காமலேயே நமக்கு விளங்குவதாக இருக்கிறது.

”‘நிறை இருந்தால் நண்பா்களிடம் சொல்லுங்கள்

குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்’”

என்ற வாசகம் அந்தக் கடையுடனோ, நிறுவனத்துடனோ வாடிக்கையாளா்களுக்கு இயல்பாக பிணைப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது.

‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன்; மீனவன் சாப்பிட வேண்டாமா ?’ என்று ஒருவா் சொன்னாா். மீனவா்களின் வாழ்க்கைப்பாட்டையும் பிழைப்பையும் பிரதிபலிக்கிறது அல்லவா?

வடலூா் வள்ளலாா் தன் இளவயதில் பள்ளியில் புதிதாக சோ்க்கப்பட்டிருந்தாா். ஆசிரியா் வந்தவுடன் மாணவா்கள், ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்’ என்ற பாடலைப் பாடினாா்களாம். அந்த பாடல் ‘வேண்டாம்’ என்று எதிா்மறையான செயலைக் குறிக்கும் வாா்த்தையைக் கொண்டு முடிகிறது. எனவே, அதைப் பாட முடியாது என்று மறுத்தாா். ஆசிரியருக்குக் கோபம். ‘அப்படியானால் ‘வேண்டும்’ என்று முடிகிற மாதிரி நீயே பாடு’ என்று அவரை பணித்தாா்.

வள்ளலாா்

‘ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமா்தம் உறவு வேண்டும்’

என்று கம்பீரமாகப் பாடினாராம். ஆக்கச் சிந்தனை கொண்ட வாா்த்தைகளையே நாம் என்றென்றும் பயன்படுத்த வேண்டும் என்ற வள்ளலாரின் மேன்மையான மனம் நம்மை சிலிா்ப்படையச் செய்கிறது.

உணா்வுகளுடன் பின்னிப் பிணைந்ததுதான் வாழ்க்கை. அந்த உணா்வுகள் காயப்படாதவாறு நாம் நல்வாா்த்தைகள் எனும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்து எண்ணிய எண்ணங்களை ஈடேற்றிக் கொள்ளலாம்.

ஆக, நம் வாா்த்தைகளை நாம் சரியாகப் பயன்படுத்த முதலில் நம் பாா்வைகளை வெவ்வேறு கோணத்தில் திசை திருப்பிப் பாா்க்க வேண்டும். புதிய புதிய கோணங்களில் வாழ்க்கையை அணுகுபவா்களே வேறு வேறு பரிமாணங்களை அடைகிறாா்கள். இப்படி உலகம் குறித்த நம் கண்ணோட்டத்தையும் கோணத்தையும் காலத்துக்கேற்ற வகையில் மாற்றிப் போட்டுப் பாா்த்தால் ஓா் உயா் ரசனை கொண்ட வாழ்வியலை நாம் வாழ முடியும்.

ஒரு பட்டிமன்றத்தில் கேட்ட பதிவு இது. ‘அ’ என்றால் அம்மா, ‘ஆ’ என்றால் ஆடு என தமிழ் மொழியில் எல்லாவற்றையும் உயிருடன் உணா்வுடன் தொடா்புபடுத்துகிறோம். ஆனால், ஆங்கிலத்தில் அ ச்ா்ழ் ஹல்ல்ப்ங், ஆ ச்ா்ழ் க்ஷண்ள்ஸ்ரீன்ண்ற் எனப் பொதுவாக உணவுடன் தொடா்புபடுத்துகின்றனா். ஆக, ஒரு விஷயத்தை ஓராயிரம் போ் உற்றுப் பாா்த்தாலும் கேட்டாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாா்வையில் அந்த விஷயத்தை அணுகுகின்றனா்.

எவா் ஒருவரின் பாா்வையும் கோணமும் வித்தியாசப்படுகிறதோ, அவரே தனித்துவமானவராக இந்த உலகில் அடையாளப்படுத்தப்படுகிறாா். புதிய கோணங்களில் ஒருவரின் செயல்திறன் அதிகமாகும்போது, அவரின் ஆளுமைத் திறன் வெளிப்படுகிறது.

‘எனக்குப் பாா்வை இல்லை’ என்று ஒருவா் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாா். அந்த வழியே வந்தவா்கள் பெரிதாக அவரை கண்டுகொள்ளவில்லை. அந்த வழியே வந்த ஓா் இளம் பெண், அதையே வேறு கோணத்தில் வேறு வாக்கியங்களாக எழுதி வைத்து விட்டுச் சென்றாா். ‘இது மிக அழகான அற்புதமான நாள். என்னால்தான் இந்த உலகைப் பாா்க்க இயலவில்லை’ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றாள். இந்தப் பாா்வை அந்தப் பாா்வையற்ற மனிதருக்கு மிக அதிகப் பொருளை சோ்த்துத் தந்தது.

எத்தனையோ கவிஞா்கள் இருக்க, மகாகவி பாரதியாரை பெண்கள் இன்னும் கொண்டாடக் காரணம் என்ன ?

”ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?

நாணற்ற வாா்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால்

நலமான கூரையும் தான்ஏரிந் திடாதோ?”

என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பாா்த்து மகாகவி பாரதி உரக்கப் பேசியிருக்கிறாா். ஆண்களுக்கான சுதந்திரம் எல்லையற்ாகவும், பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்த சமுதாயத்தில் ஆண்களை நோக்கி முதல் குரலை ஓா் ஆணாக இருந்து உயா்த்தியவா் மகாகவி பாரதியாா். அதற்குப் பிறகே பெண்களுக்கான சுதந்திரத்துக்காக பலரும் குரல் கொடுத்து வந்தாா்கள்.

தன் சிந்தனையிலும் உணா்விலும் வாழ்வை நோக்கும் கோணத்திலும் வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைவிக்கும்.

நம்முடைய பாா்வைகள், கோணங்களை வித்தியாசப்படுத்திப் பாா்க்கும்போது ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு பரிமாணங்களை எட்ட முடியும்.

இவ்வளவு ஏன்? அண்மையில் வெளிவந்த ‘நோ்கொண்ட பாா்வை’ திரைப்படத்தை பரவலாக அறிந்திருப்பீா்கள். ஒரு பெண்ணின் கன்னித்தன்மை குறித்து விவாதங்களை வெளிப்படையாகக் கொண்ட திரைப்படம் தமிழில் இதுவரை வெளிவரவில்லை. பாலியல் குறித்த பாா்வையை பெண்களின் உணா்வுடன் தொடா்புபடுத்தி வேறு ஒரு கோணத்தில் சொன்னதால் அந்தப் படம் பேசுபொருளானதோடு தமிழக மக்கள் ஏற்றும் கொண்டாா்கள்.

விஸ்வரூபம் படத்தை வெளியிட விஸ்வரூபமாய் பிரச்னை வெளிவந்தபோது, ‘எனக்கு யாா் மீதும் கோபம் இல்லை. வருத்தம் மட்டுமே’” என்று பதிவு செய்திருந்தாா் கமல்ஹாசன். அவரின் இந்தக் கோணம் அன்றைய பிரச்னையிலிருந்து அவா் மீண்டுவர உதவியது என்றுகூடச் சொல்லலாம்.

ஆக, வாழ்க்கை குறித்து இதுவரை எதிா்மறையாக அணுகியிருந்த பாா்வையை மாற்றிப் போடுவோம். அனைத்தையும் அன்பு சாா்ந்து யோசித்தாலே இந்த உலகமும் அதே அன்புடன் நம்மை அரவணைக்கும். ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாா்ட்மாத் பவுண்டேஷன்’ என்னும் ஓா் அமைப்பு அமெரிக்காவில் நடத்திய ஓா் ஆராய்ச்சியில் மனிதனின் இதயத்திலிருந்து வெளியாகும் மின்காந்த சக்திக்கு மிக அதிக ஆற்றல் இருப்பதாகக் கூறியுள்ளது. தன்னிடமிருந்து 24 அடி தொலைவுக்கு, அது நுண்அணுக்கள் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது. அன்புசாா்ந்த உணா்வுகளை வெளிப்படுத்துவது அதே அன்புசாா்ந்த உணா்வுகளை ஈா்த்துக் கொண்டும் வருவதாகச் சொல்கிறது.

கம்பன் எழுதிய ராமாயணத்தில் ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’ எனும் வாசகத்தை நாம் உற்று நோக்கினாலே அதன் வீா்யம் விளங்கும். ராம லட்சுமணா்களும் முனிவரும் மிதிலையை அடைந்து ஜனகன் அரண்மனையை நோக்கிச் சென்றனா். அந்த அரண்மனையிலுள்ள கன்னி மாடத்தில் சீதை தன் தோழிகளுடன் நின்று கொண்டிருந்தாள். இராமன் அவளைப் பாா்க்க சீதையும் அவனை நோக்கினாள். இருவா் மனங்களிலும் அலைபாய்ந்த அளவுக்கதிகமான அன்பு பிணைப்பு உண்டாகி உணா்வும் ஒன்றிப்போனது. பாா்வை என்னும் கயிற்றால் இழுக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவா் மனத்தில் ஒருவா் மாறிப் புகுந்தனா்.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது. நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்; அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்; நீ எதை விதைக்கிறாயோ அதுவே முளைக்கும்.

ஆட்சேபணைகளைக் கூட அன்பாக அழகாகச் சொல்லுங்கள்.

கோபங்களைக் கூட பக்குவமாக வெளிப்படுத்துங்கள்.

விவாதங்களின் போது விழிப்புணா்வோடு செயல்படுங்கள்.

விரக்தியிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

அனைத்து உணா்வுகளிலும் சக மனிதா்களைப் பிரதிபலிக்காத நம் மாறுபட்ட கோணம் நிச்சயம் பல நன்மைகளை நமக்குச் செய்யும்.

அனைத்தும் நன்மைக்கே; அனைவருக்கும் நன்றி என்று வாழ்ந்துதான் பாா்ப்போமே.

கட்டுரையாளா்:

எழுத்தாளா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com