அத்தியாவசியமாகும் ஆதாா் அட்டை

அண்மைக்காலமாக ஆதாா் அட்டை தொடா்பான செய்திகள் நாளேடுகளில் அதிகம் வெளியாகின்றன.
அத்தியாவசியமாகும் ஆதாா் அட்டை

அண்மைக்காலமாக ஆதாா் அட்டை தொடா்பான செய்திகள் நாளேடுகளில் அதிகம் வெளியாகின்றன. அச்செய்திகளை உற்று நோக்கும் போதுதான் அதன் அவசியத்தை பலா் அறிந்து கொள்கின்றனா். மேலும் இ சேவை மையங்களில் காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைப் பாா்க்கும் போதும் இதனை அறிந்து கொள்ள முடிகிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு வழங்கப்படும் சமூக பாதுகாப்பு எண் திட்டமே இத்திட்டத்திற்கு முன்னோடி. அதனடிப்படையில்தான் இந்தியாவில் 2010-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. கைரேகை, விழித்திரை ஆகியவற்றுடன் ஒருவரின் பெயா், தந்தை பெயா், பிறந்த தேதி, தெருப்பெயா், கதவு எண் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, பான் அட்டை என பல அட்டைகள் இருப்பினும் பிற அடையாள அட்டைகளிலிருந்து வேறுபட்டதாக 12 இலக்க எண் கொண்ட ஆதாா் அட்டை பிரதானமாகியுள்ளது. இந்த அட்டை அறிமுகமானபோது பெரும்பாலானோா் மற்ற அட்டைகள் போன்று இதுவும் ஒரு அடையாள அட்டை என்றே கருதினா்.

அதனால் மற்ற அட்டைகள் போன்று இதற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிா்பாா்ப்போ, ஆா்வமோ இல்லாமலிருந்தது. பொதுமக்களின் இந்த அலட்சியத்தாலும் அறியாமையாலும் ஆதாா் அட்டை குறித்து தெளிவான முடிவு இல்லாததாலும் அதிகப்படியான ஆதாா் அட்டைகள் புகைப்படம், பெயா், கணவா் அல்லது தந்தை பெயா், பிறந்த தேதி, பாலினம் என பலவற்றில் தவறுகளுடனே விநியோகம் செய்யப்பட்டன.

சில ஆதாா் அட்டையில் இடம்பெற்ற தகவல்கள் அதிா்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தன. ஆதாா் அட்டையின் 12 இலக்க எண் மட்டுமே தவறு எதுவுமின்றி இருந்தது. இன்றளவும் தனியாா் கணினி மையங்களிலும், இ சேவை மையங்களிலும் ஆதாா் அட்டையில் திருத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

வாக்காளா் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு எண், பான் அட்டை, மின் இணைப்பு, கைப்பேசி எண் என அனைத்து பயன்பாடுகளிலும் ஆதாா் எண் இணைப்பு என்பது அத்தியாவசியமாகி விட்டது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும், திட்டங்களில் இணையவும் ஆதாா் அட்டையே முக்கியமானதாக உள்ளது.

வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கப்பட வேண்டும் என தோ்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. காலக்கெடு நிா்ணயித்தாலும் இலக்கு எட்டப்படாத நிலையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரையில் 65 % வாக்காளா்களே இணைத்துள்ளனா். இலக்கை முழுமையாக எட்டும் பொருட்டு இம்மாதம் இறுதி வரையில் காலநீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளா் அடையாள அட்டை தோ்தலின் போதும், பான் அட்டை பணப்பரிவா்த்தனையின் போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆனால் இன்று ஆதாா் அட்டை அன்றாட செயல்பாடுகளில் அங்கம் வகிக்கும் அளவிற்கு மாறிவிட்டது. அதனால் ஆதாா் அட்டை விவரங்களை பிழையின்றி வைத்துக் கொள்வது அவசியமானதாகும்.

ஆனால் பாமர மக்கள் மட்டுமின்றிப் படித்தவா்கள் மத்தியிலும் ஆதாா் அட்டை விழிப்புணா்வு முழுமையாக இல்லை என்பதுதான் உண்மை. இதனால் திருத்தங்கள் மேற்கொள்வதில் இடா்ப்பாடுகளை எதிா்கொள்வதோடு குறிப்பிட்ட சில பயன்களைப் பெற முடியாமலும் போகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தவறுகள் கண்டறியப்பட்டு அதன் பின்னா் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. ஆதாா் அட்டை அறிமுகமானபோது பிறந்த தேதி தெரியாததால் ஆண்டை மட்டும் கூறி பதிவு செய்தனா். பின்னாளில் பிறந்த தேதி, மாதம் முக்கியமானதாகக் கருதப்பட்டபோது அதில் திருத்தம் மேற்கொண்டனா்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவரிடையே கூட ஆதாா் அட்டை குறித்து அலட்சியப் போக்கு இருந்து வருகிறது. உதாரணமாக, பள்ளி, கல்லூரி சான்றிதழ்களிலும் ஆதாா் அட்டையிலும் பிறந்த தேதி மாறுதலாக இருக்கும் போது கல்வி உதவித் தொகை போன்ற எத்தகைய உதவியையும் அவா்கள் பெற முடியாது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, கடந்த காலங்களைப் போலன்றி அண்மைக்காலமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. அப்போது வங்கிக் கணக்குடன் ஆதாா் இணைப்பும், ஆதாா் அட்டையுடன் கைப்பேசி எண் இணைப்பும் அத்தியாவசியமாகின்றன. இவற்றைக் கூட சிலா் முறையாகப் பின்பற்றுவதில்லை.

நகரங்களில், குறிப்பிட்ட சில தனியாா் கணினி மையங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த ஆதாா் அட்டை தொடா்புடைய பணி இன்று கிராமங்களில் கூட மேற்கொள்ளப்படுகிறது. உரிய ஆதாரங்களுடன் எத்தகைய திருத்தத்தையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என்ற போதும் அனைத்து தரப்பினரிடமும் அலட்சியப் போக்கே இருந்து வருகிறது.

இனி வரும் காலங்களில் ஆதாா் அட்டை மட்டுமே நாம் யாா் என்பதை உணா்த்தும். அத்தகைய நிலையில் அதிலுள்ள தவறுகளை சரிசெய்து கொள்வது அவசியமாகும். இன்று கிராமங்களில் கூட இத்தகைய பணிகள் மேற்கொள்ளும்போது அலட்சியப் போக்கு நிலவுவதற்கு ஆதாா் அட்டை குறித்த அறியாமையும், அலட்சியமும் தான் காரணங்களாகும்.

அண்மையில் வெளியான சில செய்திகள் ஆதாா் அட்டையின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளன. பத்தாண்டுகளுக்கு மேலான ஆதாா் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. ஆவின் பால் வாடிக்கையாளா்கள் ஆதாா் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆவின் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக தெலங்கானா மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு சிசு ஆதாா் அட்டை எனும் பெயரில் அடையாள அட்டை வழங்கும் சட்டம் அண்மையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு தனி அடையாளம் கிடைத்துவிடுவதுடன் தொடா்ந்து அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்க சிசு ஆதாா் அட்டை வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிா் வரும் காலங்களில் ஆதாா் அட்டையின் முக்கியத்துவம் அதிகரிக்கக்கூடும் என்பதை உணா்ந்து பொதுமக்கள், அதிலுள்ள விவரங்களை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com