சென்னையை அடுத்த உத்தண்டி அமெட் பல்கலைக்கழகத்தில் வணிகக் கப்பல்கள் மேலாண்மை குறித்த சர்வதேசக் கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது.
பெல்ஜியம் தூதர் பார்டிகுருப் வணிகக் கப்பல்கள் மேலாண்துறை வளர்ச்சிக்கான வழிமுறைகளையும், உலகளாவிய அளவில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விவரித்தார்.
மெடிட்டிரேனியன் கப்பல் நிறுவனத்தின் சென்னை துணைத் தலைவர் என்.கிருஷ்ணகுமார், மத்திய கிழக்கு நாடுகள் பிராந்திய கப்பல் நிர்வாகத் தலைவர் கிருஷ்ணன் சுப்ரமணியன், அமெட் பல்கலைக்கழக இணை வேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன், துணை வேந்தர் ஜி.திருவாசகம், பதிவாளர் பி.சரவணன், அறங்காவலர் எஸ்.கரிகாலன், துறைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், பேராசிரியர் அனிசாம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.