பணியில் இருப்பவர்களுக்கான இரண்டு ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: பணியில் இருப்பவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகள் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் டிஜிட்டல் பொருளாதாரம் எதிர்கால உற்பத்தித் துறை எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையிலும் இந்த எம்.பி.ஏ. படிப்பு வழங்கப்பட உள்ளது.
வரும் ஜனவரி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். வார இறுதி நாள்களில் வகுப்புகள் நடத்தப்படும்.இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க நவ.30 கடைசி நாளாகும்.
சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள் ஏதாவது ஒரு பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு தொழில்நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மூலம் சேர்க்கை நடத்தப்படும்.