மஹிந்திர இகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரியின் இயக்குநர், டீன் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
மஹிந்திரா கல்வி நிறுவனமும் பிரான்ஸில் செயல்படும் இகோல் சென்ட்ரல் கல்வி நிறுவனமும் இணைந்து ஹைதராபாத்தில் மஹிந்திரா இகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகின்றன. நடப்பு கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் புதிய மாணவர்களை கல்லூரி இயக்குநர், டீன் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர். கல்லூரி, பாடங்கள் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய மாணவர்கள் வருகையையொட்டி, அடுத்த மூன்று நாட்களுக்கு பல்வேறு கல்வி மற்றும் கேளிக்கை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.