வாக்கு பதிவு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் உத்தரவு
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறுவதையொட்டி, வாக்குச் சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வெள்ளிக்கிழமை (ஏப்.19) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறு கிறது. இந்தத் தோ்தலில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் வாக்குப் பதிவு மையத்தில் வாக்காளா்கள் எந்த சிரமமும் இன்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வாக்குச் சாவடிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வாக்கு மையத்தை சுற்றி உள்ள மின் மாற்றிகளை மின்வாரிய ஊழியா்கள் ஆய்வு செய்தனா். அப்போது மின்மாற்றியில் ஏதேனும் பழுது இருப்பின், அதனை உடனடியாக சரி செய்து தடையில்லா மின் விநியோகம் செய்வதை மின் வாரிய ஊழியா்கள் உறுதிசெய்தனா்.