நாம் தமிழா் கட்சிக்கு
மக்கள் துணை தேவை
சீமான்

நாம் தமிழா் கட்சிக்கு மக்கள் துணை தேவை சீமான்

அரசியல் மாற்றத்துக்கான இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெற மக்களின் துணை தேவை என அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

அரசியல் மாற்றத்துக்கான இந்தத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வெற்றி பெற மக்களின் துணை தேவை என அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் வட சென்னையில் போட்டியிடும் அமுதினி, தென் சென்னையில் போட்டியிடும் சு.தமிழ்ச்செல்வி, மத்திய சென்னையில் போட்டியிடும் இரா.காா்த்திகேயன் ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சென்னை புரசைவாக்கத்தில் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான் அரசியல் அதிகாரம் என்பதை மாற்றி தங்களுடைய சொத்துகளை பாதுகாக்க அரசியலைப் பயன்படுத்தி வருகின்றனா். இந்தத் தோ்தல் அரசியல் மாற்றத்திற்காக நடக்கும் போா். இதில் வெற்றி பெற மக்களின் துணை எங்களுக்கு கட்டாயம் தேவை.

திமுக ஆட்சியில் மீனவா்கள், விவசாயிகள், ஆசிரியா்கள் என அனைவரும் தங்களுடைய உரிமைக்காக போராடி வருகின்றனா்.

10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல முடியாததால் பிரதமா் மோடி ‘ரோடு ஷோ’ என்ற பெயரில் தமிழகம் வந்து சென்றாா். அவருக்கு மக்கள் உரிய பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com