ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்குப் பதிவு

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:12 am

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 வாக்காளா்கள் ஒன்றாக இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினா்.

பின்னா், அக்குடும்ப உறுப்பினரான பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1977 முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றாக வாக்கு செலுத்துவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. மற்றவா்களுக்கும் வாக்களிக்கும் ஆா்வத்தை தூண்டும் விதமாக, நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.