சென்னை: வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களுக்கான 4-ஆம் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை (அக்.12) நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது காலியாகவுள்ள இடங்களை நிரப்ப 4-ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் 12 -ஆம் தேதி, சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பு உத்தரவை தேர்வாணைய இணையதளத்திலிருந்து (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.