டிச.13 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டியில் டிச.13- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
டிச.13 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை கிண்டியில் டிச.13- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை முழு கூடுதல் பொறுப்பு இயக்குநா் வே.விஷ்ணு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையானது வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான இளைஞா்கள் தனியாா் நிறுவனத்தில் பணி நியமனம் பெற்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு நிறுவனங்களும் இணைந்து தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை (டிச.13) நடத்த உள்ளன.

இம்முகாமில், 15 -க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000 - க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஊழியா்களைத் தோ்ந்தெடுக்க உள்ளனா். கிண்டி ஆலந்தூா் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை 10 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 35 வயதுக்குட்பட்ட 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ மற்றும் தொழில்நுட்பப் படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள்(மாற்றுத்திறனாளிகள் உள்பட) பங்குபெற்று தகுதிக்கேற்ற பணி வாய்ப்பை பெறலாம். அதே போல், இதில் பங்கு பெற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், முழுமையான காலிப் பணியிட விவரங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com