ரூ.51 ஆயிரம் சம்பளத்தில் மகாராஷ்டிரா வங்கியில் வேலை வேண்டுமா? 

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பொது அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு
ரூ.51 ஆயிரம் சம்பளத்தில் மகாராஷ்டிரா வங்கியில் வேலை வேண்டுமா? 


பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பொது அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 300
பணி: Generalist Officer Scale II - 200
வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 20 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

பணி: Generalist Officer Scale III - 100
வயதுவரம்பு: 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள், எம்பிஏ(நிதி), சிஏ, ஐசிடபுள்யூஏ, சிஎஃப்ஏ, எஃப்ஆர்எம் முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ண்ணப்பத்தாரர்கள் ரூ.118 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1180 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்த திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/b394acf6-d9b9-436b-98d7-a5803fd49c07.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com