தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறையில் காலியாக உள்ள கணக்கியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Accounts Officer, Class III
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் 56,900 -1,80,500
வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: பட்டய கணக்காளர், கணக்காளர் நிறுவனத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை.
எழுத்துத் தேர்வு: இரு தாள்கள் கொண்டது. அதாவது, தாள்- 1 Cost Accountancy இது 300 மதிப்பெண்கள், தாள் -II General Studies இது 200 மதிப்பெண்கள் என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வுக்கு 70 மதிப்பெண்கள் என மொத்தம் 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_07_notifyn_accountofficer_class_III.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2019