இந்திய கடற்படை மாலுமி வேலை: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
இந்திய கடற்படை மாலுமி வேலை: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!


இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 
இந்திய கடற்படையில் காலியாக உள்ள மெட்ரிகுலேட் மாலுமிகள் (சமையல்காரர், உபசரிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்கள்) பணிக்கு, இந்திய கடற்படை நுழைவுத் தேர்வில் (INET) தேர்ச்சி பெற வேண்டும். 

இதற்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 1 ஏப்ரல் 2000 முதல் 31 மார்ச் 2003 வரை (இரு தேதிகளும் உள்பட)  பிறந்த திருமணம் ஆகாத ஆண்கள் www.join
indiannavy.gov.in.  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில்  பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

மேலும் விண்ணப்பதாரர்கள்  தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களையும் அணுகி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். இதற்கு கட்டணமாக ரூ.60 மற்றும் அதற்குரிய ஜி.எஸ்.டி. வரியை செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். 

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு, அதன்பின் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், 2020 ஏப்ரல் மாதம் ஒடிஸாவில் உள்ள ஐஎன்எஸ் சில்க்கா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அழைக்கப்படுவார்கள்.  இதற்கான உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி உள்ளிட்ட விவரங்களை www.join
indiannavy.gov.in.  என்ற இணையதளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com