அங்கன்வாடி மையங்களில் வேலை வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி அரசு!

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் 
அங்கன்வாடி மையங்களில் வேலை வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி அரசு!


 
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் மதிப்பூதிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் புதுச்சேரியில் பணியமர்த்தப்படுவார்கள்.

பணியிடம்: புதுச்சேரி

நிறுவனம்: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

பணிகள்:    அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்ப முறை: www.wcd.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Department of Women and Child Development, Puducherry Housing Board Complex (Opp. LIC office), Saram, Puducherry-605013.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://wcd.py.gov.in/content/application-recruitment-anganwadi-worker-and-anganwadi-helper?application%20aww%20&%20awh என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.12.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com