எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரி வேலை வேண்டுமா? 

ரிஷிகேஷில் செய்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள.
எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியர் அதிகாரி வேலை வேண்டுமா? 


ரிஷிகேஷில் செய்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Nursing Officer (Staff Nurse Grade -II)

காலியிடங்கள்: 372

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.  

தகுதி: B.sc (Hons), B.sc. Nursing, B.sc (Post-Certificatio), Post Basic B.Sc Nursing பட்டப்படிப்பை முடித்து Nurses மற்றும் Midwife in State, India Nursing Council-ல் பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது அதே துறையில் டிப்ளமோ முடித்து பதிவு செய்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.3000, ஓபிசி பிரிவினருக்கு ரூ.1,500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.500 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aiimsrishikesh.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். 

மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://www.aiimsrishikesh.edu.in/recruitments/group%20b%20-%20nursing%20officer%20%20-%20dr%20-%20website.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com