10-வது தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!

இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு 
10-வது தேர்ச்சி பெற்றவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!



இந்திய கடற்படையில் காலியாக உள்ள மாலுமி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி இந்திய திருமணமாகத ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 400

நிர்வாகம்: இந்திய கடற்படை (Indian Navy) 

பணி: sailors

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.10.2000 முதல் 30.09.2003 வரை பிறந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 
சம்பளம்: ஒரு ஆண்டு பயிற்சி வரை மாதம் ரூ.14,600 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு மாதம் ரூ. 21,700 - 69,100 + இதர சலுகைகள். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.joinindiannavy.gov என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.215 மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழுமையான விவரங்கள், விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு www.joinindiannavy.gov என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_25_1920b.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.11.2019
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com