அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?

இந்திய அஞ்சல்  துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய
அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா?



இந்திய அஞ்சல்  துறையில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 08

பணி: Skilled Artisans

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Motor Vehicle Mechanic - 02
2. Welder - 02
3. Tyreman - 02
4. Tinsmith - 01
5. Blacksmith - 01

சம்பளம்: மாதம் ரூ.19,900

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது 8 ஆண் வகுப்பு தேர்ச்சி பெற்ற சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: திறன்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.indianpost.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுயசான்று செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager, Mail Motor Services, 134-A, S.K.Ahire MARG, Worli, Mumbai- 400 018

மேலும் விவரங்கள் அறிய https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/MMSMumbai.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com