பிளஸ் 2 தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை 

தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை
பிளஸ் 2 தேர்ச்சியா? தமிழக வனத்துறையில் வனக் காவலர் வேலை 


தமிழ்நாடு வனத்துறையில் நிரப்பப்பட உள்ள வனக் காவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலிடங்கள்: 320 

பணி:  Forest Guard - 227

பணி:  Forest Guard with Driving Licence - 93

தகுதி: அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,200 - 57,900

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி ரூ.150, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.forests.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/pages/view/recruitment என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.02.2020

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com