மத்திய அரசு வேலை வேண்டுமா? பிஇஎல் நிறுவனத்தில் டிப்ளமோ இன்ஜினியர்களுக்கு வேலை
மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள இன்ஜினியரிங் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Engineering Assistant Trainee
காலியிடங்கள்: 13
1. எலக்ட்ரானிக்ஸ் - 10
2. மெக்கானிக்கல் - 03
சம்பளம்: மாதம் ரூ.24,500 - 90,000
வயதுவரம்பு: 31.07.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். முதல் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சின்போது மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும். பின்னர் நிரந்தர பணி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2022
Related Article
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி...?
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... கடலோர காவல் படையில், டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வேலை
திருச்சி என்ஐடி-இல் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

