அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 1

அரசுத் தேர்வுகளுக்கான வினா-விடை: பொதுத் தமிழ் - 1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 28.3.2024 முதல் தினமணி இணையதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் 6 ஆம் வகுப்பு முதல் முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் வினா-விடைகளாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துகள்.

ஆறாம் வகுப்பு: வாழ்த்து - திருவருட்பா

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்

எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்

கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து

* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்

* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்

* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.

* பெற்றோர் - இராமையா - சின்னமையார்

* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874

* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.

* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை

* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை

* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.

* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.

* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்

* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.

* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.

* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.

* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.

* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.

* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.

* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.

அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை

சொற்பொருள்:

ஆர்வலர் - அன்புடையவர்

புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்

என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.

வழக்கு - வாழ்க்கை நெறி

நண்பு - நட்பு

மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே

அன்புதான் அடிப்படை என்பது பொருள்)

அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்

என்பிலது - எலும்பில்லாதது(புழு)

பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்

ஆருயிர் - அருமையான உயிர்

ஈனும் - தரும்

ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை

உண்டாக்கும் என்று பொருள்)

வையகம் - உலகம்

என்ப - என்பார்கள்

புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்

எவன் செய்யும் - என்ன பயன்?

அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு

பிரித்து எழுதுக:

அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -

அன்பு உள்ளத்தில் இல்லாத

வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்

தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல

வற்றல்மரம் - வாடிய மரம்

- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.

- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.

- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்

- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

- அதிகாரங்கள்: 133

- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.

- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.

- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.

எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.

ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து

* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.

சொற்பொருள்:

* பண் - இசை

* வண்மை - கொடைத்தன்மை

* போற்றி - வாழத்துகிறேன்

* இருக்கை - ஆசனம்

* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்

- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.

* திரு.வி.க வின் பெற்றோர்

- விருத்தாசலனார் - சின்னம்மையார்

* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்

- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.

* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)

திரு.வி.க வின் சிறப்பு:

* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.

* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?

- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்

- பெண்ணின் பெருமை

- தமிழ்த்தென்றல்

- உரிமை வேட்கை,

- முருகன் அல்லது அழகு முதலியன.

* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?

- 26.08.1883 - 17.09.1953

* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?

- பொதுமை வேட்டல்

* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?

- போற்றி

* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?

- நாடு, மதம், இனம், மொழி, நிறம்

* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?

- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.

நூல் பயன்:

- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.

* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?

- நானூற்று முப்பது

* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?

- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி

* இறைவன் உயிரில் வைத்தது எதனை?

- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.

* இறைவனின் இருக்கை யாது?

- இறைவனின் இருக்கை உண்மை.

திருக்குறள்

சொற்பொருள்:

* புரை - குற்றம்

* பயக்கும் - தரும்

* சுடும் - வருத்தும்

* அன்ன - அவை போல்வன

* எய்யாமை - வருந்தாமல்

* அகம் - உள்ளம்

* அமையும் - உண்டாகும்.

ஆசிரியர் குறிப்பு:

* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.

சிறப்பு பெயர்கள்:

- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்

நூல் குறிப்பு:

- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.

- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.

- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.

- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?

- தாயின் பெயர் - ஆதி

- தந்தையின் பெயர் - பகவன்

* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?

- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)

* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?

- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.

* வள்ளுவன் என்றால் பொருள் யாது?

- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்

* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?

- வாசுகி

* வாசுகி யாருடைய மகள்?

- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்

* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?

- நெசவுத் தொழில்

* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?

- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.

* திருவள்ளுவர் காலம் எது?

- கி.மு. 31

- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.

* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?

- மூன்று பிரிவுகளைக் கொண்டது.

1. அறத்துப்பால்

2. பொருட்பால்

3. இன்பத்துப்பால்

* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?

- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.

* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?

- பத்து

* திருக்குறள் நூலின் பயன் யாது?

- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.

* வாய்மை என்றால் என்ன?

- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?

- ஆயிரத்து முந்நூற்று முப்பது

* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?

- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.

பிரித்து எழுதுக:

* யாதெனின் - யாது + எனின்

* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்

* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:

* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.

* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.

* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.

* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

- தொடர்ந்து தினமணி இணையதளத்தை பார்வையிடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com