தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 28.3.2024 முதல் தினமணி இணையதளத்தின் வேலைவாய்ப்பு பகுதியில் 6 ஆம் வகுப்பு முதல் முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் வினா-விடைகளாக தொகுக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துகள்.
ஆறாம் வகுப்பு: வாழ்த்து - திருவருட்பா
கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
* பெற்றோர் - இராமையா - சின்னமையார்
* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
ஆர்வலர் - அன்புடையவர்
புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
வழக்கு - வாழ்க்கை நெறி
நண்பு - நட்பு
மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
என்பிலது - எலும்பில்லாதது(புழு)
பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
ஆருயிர் - அருமையான உயிர்
ஈனும் - தரும்
ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
உண்டாக்கும் என்று பொருள்)
வையகம் - உலகம்
என்ப - என்பார்கள்
புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
எவன் செய்யும் - என்ன பயன்?
அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
பிரித்து எழுதுக:
அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -
அன்பு உள்ளத்தில் இல்லாத
வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
வற்றல்மரம் - வாடிய மரம்
- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
- அதிகாரங்கள்: 133
- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.
ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து
* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.
சொற்பொருள்:
* பண் - இசை
* வண்மை - கொடைத்தன்மை
* போற்றி - வாழத்துகிறேன்
* இருக்கை - ஆசனம்
* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்
- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
* திரு.வி.க வின் பெற்றோர்
- விருத்தாசலனார் - சின்னம்மையார்
* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
- பெண்ணின் பெருமை
- தமிழ்த்தென்றல்
- உரிமை வேட்கை,
- முருகன் அல்லது அழகு முதலியன.
* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?
- 26.08.1883 - 17.09.1953
* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?
- பொதுமை வேட்டல்
* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
- போற்றி
* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?
- நாடு, மதம், இனம், மொழி, நிறம்
* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?
- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்:
- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.
* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?
- நானூற்று முப்பது
* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?
- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
* இறைவன் உயிரில் வைத்தது எதனை?
- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.
* இறைவனின் இருக்கை யாது?
- இறைவனின் இருக்கை உண்மை.
திருக்குறள்
சொற்பொருள்:
* புரை - குற்றம்
* பயக்கும் - தரும்
* சுடும் - வருத்தும்
* அன்ன - அவை போல்வன
* எய்யாமை - வருந்தாமல்
* அகம் - உள்ளம்
* அமையும் - உண்டாகும்.
ஆசிரியர் குறிப்பு:
* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
சிறப்பு பெயர்கள்:
- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
நூல் குறிப்பு:
- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?
- தாயின் பெயர் - ஆதி
- தந்தையின் பெயர் - பகவன்
* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?
- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)
* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?
- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.
* வள்ளுவன் என்றால் பொருள் யாது?
- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்
* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
- வாசுகி
* வாசுகி யாருடைய மகள்?
- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்
* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?
- நெசவுத் தொழில்
* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?
- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.
* திருவள்ளுவர் காலம் எது?
- கி.மு. 31
- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.
* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?
- மூன்று பிரிவுகளைக் கொண்டது.
1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. இன்பத்துப்பால்
* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?
- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.
* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?
- பத்து
* திருக்குறள் நூலின் பயன் யாது?
- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.
* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.
* வாய்மை என்றால் என்ன?
- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.
* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?
- ஆயிரத்து முந்நூற்று முப்பது
* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?
- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.
பிரித்து எழுதுக:
* யாதெனின் - யாது + எனின்
* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்
* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:
* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.
* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.
* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.
* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.
- தொடர்ந்து தினமணி இணையதளத்தை பார்வையிடவும்.