108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ராமர், ஸ்ரீ வரதர், ஸ்ரீ யோகநரசிம்மர், ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீ ராமர், ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வேதவல்லி தயார் மற்றும் ஆழ்வார், ஆச்சார்யார்களுக்கு கடந்த ஜூன் மாதம் மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ வரதர், ஸ்ரீ திருமழிசை ஆழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதிகளின் தொல்லியல் துறை வல்லுநர்களின் ஆலோசனைப்படி, அதன் தொன்மை மாறாமல் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பிறகு ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ யோகநரசிம்மர் சுவாமிக்கு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) அன்று மஹாஸம்ப்ரோக்ஷணத்தைக் நடைபெற்றது. மஹாஸம்ப்ரோக்ஷணத்தைக் காண மாட வீதிகளில் திரண்ட மக்கள்.