63 நாயன்மார்களில் ஒருவரான இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனாரின் வரலாற்று சிறப்பிக்கும் வகையில், கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது. இதில் சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இத்திருவிழா நடைபெற்றது.