காஞ்சிபுரத்தில் உள்ள திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஸ்ரீ ஆதி அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று அத்திவரதரை தரிசித்த பிரபலங்கள்.
அத்திவரதரை தரிசனம் செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பாகவத்துக்கு அத்திவரதரின் திருவுருவப்படத்தை வழங்கும் கோயில் பட்டாச்சாரியார்.
அத்திவரதரை தரிசனம் செய்யும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
தெலங்கானா மாநில ஆளுநர் எஸ்.எல்.நரசிம்மனை வரவேற்று அத்திவரதரை தரிசிக்க அழைத்துச் செல்லும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள்.
அத்திவரதரை தரிசனம் செய்யும் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அத்திவரதரை தரிசனம் செய்யும் பாஜக பிரமுகர் ஹெச். ராஜா
அத்திவரதரை தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் வந்த நடிகர் எஸ்.வி.சேகர்.
சுவாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் வந்த தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி.
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த நடிகை கே.ஆர்.விஜயா மற்றும் குடும்பத்தினர்.
அத்திவரதரை தரிசனம் செய்ய வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த்.
அத்திவரதருக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க வந்த திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால். உடன் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி.
லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர்.
அத்திவரதரை தரிசனம் செய்த அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்.