வைகுண்ட ஏகாதசியையொட்டி முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருள செய்தனர். அங்கு கடல் போல் திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.