சென்னை விமானநிலையம் - மீனம்பாக்கம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா கணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மேலும் சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். விமானநிலையத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் வெங்கய்ய நாயுடு, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.