மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. தடைகளைத் தாண்டி வாடிவாசலில் வழியாக வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்க முயற்சி செய்தனர். இதில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநில ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், நடிகர்கள் லாரன்ஸ், ஆரி இயக்குனர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இலங்கையின் உவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளையும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.