பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று நம் விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பட்டணத்தில் வாழ்ந்தாலும் பாரம்பரியத்தை மறக்காமல் சென்னையிலும் பல இடங்களில் மாட்டு பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாடுகளை குளிப்பாட்டி கழுத்தில் மாலைகள் அணிவித்து கொம்புகளுக்கு வர்ணம் பூசினார்கள். பொங்கல் வைத்து மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் சிலர் பரந்து விரிந்த கடலில் மாடுகளை குளிப்பாட்டி செல்வதை பார்க்க முடிந்தது.