தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்கப்பட்டதால் சென்னை நகரில் செயற்கையான மூடுபனி போன்ற தோற்றம் காணப்பட்டது. எங்கு நோக்கினும் புகைமண்டலமாக காட்சியளித்தது. புகை மூட்டத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இருமல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்ப்பட்டது. மேலும் தெருக்கள், சாலைகள் எங்கும் குப்பை, கூளங்களாக காட்சியளித்தன.