இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு இன்னுயிரை ஈந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 71வது நாளையொட்டி கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சென்னை மெரினாவில் போக்குவரத்தை நிறுத்தி 2 நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.