பாகிஸ்தான் ராணுவத்திடம் பிடிபட்டிருந்த இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு சரியாக 9 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். காலை முதலே வாகா எல்லையில் தேசிய கொடிகள் ஏந்தி அபிநந்தனை வரவேற்ககக் காத்திருந்த பொதுமக்கள், அவரை உற்சாகமாக வரவேற்றனர். இந்தியா சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அமைதியின் அடையாளமாக அபினந்தன் விடுவிக்கப்பட்டார்.