ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், சாலைகள், மலைகள், மரம், செடி, கொடிகள் என அனைத்தும் இடங்களிலும் பனி படர்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் வெண்பனி போர்த்தியதுபோல் ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. சாலைகள் பனிமூடிக் கிடப்பதால் வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாகவே இருந்தது.