தமிழகம், புதுச்சேரியில் பள்ளிக் கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 76,019 பேர் எழுதினர். தேர்வு முடிவில் 95.2 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் விட 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவியர் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.