அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க குவிந்த மக்கள்
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சய திருதியை நாளையொட்டி, நகை வாங்குவதற்கு மக்கள், காலை முதலே நகை கடைகளில் குவிந்தனர். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு.