கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து, நாடு முழுவதும் கரோனா தாக்கத்திலிருந்து பாதுகாக்க மக்கள் அனைவரும் எந்தவித பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முடிந்தவரை வீடுகளிலேயே இருக்கும் படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.