தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மதுபானம் வாங்க பல்வேறு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கானோர் கூடினர். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், என்ற அறிவிப்பை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.