உபரி நீர் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்ததால் படிப்படியாக குறைந்து வந்த மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியாத உயர்ந்தது.