பசியின்மையைப் போக்கி நன்கு பசியுணர்வை தூண்டும் கசாயம்

பசியுணர்வை தூண்டும் முடக்கத்தான்  வெங்காய கசாயத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள். 
பசியின்மையைப் போக்கி நன்கு பசியுணர்வை தூண்டும் கசாயம்

பசியுணர்வை தூண்டும் முடக்கத்தான்  வெங்காய கசாயத்தை பயன்படுத்தி பலன்பெறுங்கள். 

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி

சாம்பார் வெங்காயம்  - 5

சீரகம்                                -  ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள்                  -   சிறிதளவு

செய்முறை

முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள கீரையையும் அதனுடன் நறுக்கிய சாம்பார் வெங்காயம் ,  சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

நன்கு கொதித்து அதனை பாதியளவாகச் சுண்டச் செய்து  இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் பசியின்மையைப் போக்கி நன்கு பசியுணர்வை உண்டாக்கும்.

தினமும் காலை வேளை இந்தக் கசாயத்தை தயார் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நன்கு பசியுணர்வைத் தூண்டும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.

Cell  :  96557 58609 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com