22. இறை அருள்

நம்மை இறைவன் தான் படைத்தான். மனிதன் என்றாலே ஆணும் பெண்ணும் தான். ஆதாமை இறைவன் படைத்தான்.
22. இறை அருள்

மனிதனின் தோற்றம்

நம்மை இறைவன் தான் படைத்தான். மனிதன் என்றாலே ஆணும் பெண்ணும் தான். ஆதாமை இறைவன் படைத்தான். ஆதம் என்றாலே ஆணும் பெண்ணும் தான். ஆண் மட்டுமல்ல. மனிதன் என்றாலே ஆணும் பெண்ணும் அடங்கியிருக்கிறது. நாம் அந்த ஆண் பெண்ணிலிருந்தே உருவானோம்.

இப்படித்தான் மனித இனம் தோன்றியது. பின்பு அவை பல மனித இனம் தோன்றியது. பின்பு அவை பல மனித குழுக்களாக வாழ்ந்தன. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காகவே பிரிவுகளும் கோத்திரங்களும் உண்டாகின. இப்படி உருவான மனிதன் பெருமை கொண்டான். தான், மற்றவரை விட உயர்ந்தவராக கருதிக் கொண்டான். நாம் யாரையும் நம்மை விடத் தாழ்ந்தவராகக் கருதக் கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது.

இறை அருள்

ஒருவர் மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்கிறார்கள். தன்னிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை உணர்வதில்லை. அந்த சிறப்புத் தன்மையை வளர வேண்டும் என்று விரும்புவதில்லை. மனிதர்களிடையே உண்டாகும் இந்த பொறாமையே எல்லா குழப்பங்களுக்கும் காரணம். எவர் இறைவனுக்குப் பயந்து இறை பக்தியோடு வாழ்கிறாரோ அவரே இந்த பூமியில் கண்ணியமான மனிதனாக, கண்ணியமான மனிதனாக, கண்ணியமான வாழ்க்கையைப் பெற முடியும். பொறாமைப்படுகிறவர்கள் சிறுமைப்பட்டு தாழ்ந்து போவார்கள்.

இறைவனுடைய அருள் யாருக்கும் மறுக்கப்பட்டதாக இல்லை. இறைவனுக்குப் பயந்து வாழ்பவர் அனைவருக்கும் இறையருள் உண்டு.

இறையருள் எல்லோருக்கும் கிடைக்குமா?

நமக்கு எப்படி இறையருள் கிடைக்கும். எனக்கு அவ்வளவு பொருள் வசதியில்லை என்றோ, எனக்கு அவ்வளவு படிப்பறிவு இல்லை என்றோ, அதனால் எனக்கு இறையருள் கிடைக்காது என்று நினைத்து விட வேண்டாம். யார் எல்லாம் இறைவனுக்கு பயபக்தியோடு இருக்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் இறை அருள் உண்டு.

இறைவனை நம்புகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சடங்குகளில் திருப்தி கொள்கிறார்கள். அதாவது இறைவனுக்கு காணிக்கை குடுத்தால் போதும் தங்கள் கஷ்டங்கள் குறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். இறைவனுக்கு பொருத்தமாக வாழ்கிறோமா, மனசாட்சிக்கு பொருத்தமாக வாழ்கிறோமா என்று உணர்ந்து வாழ்வதில்லை.

நம்பிக்கையாளர் யார்?

நம்பிக்கையாளர் யார் என்றால் அவர்கள் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு இறைவன் மேல் எந்த சந்தேகமும் கொள்ளாது தம் சம்பாத்தியத்தைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும், இறைவனின் பாதையில் தியாகம் செய்வார்கள்.

அதாவது ஒருவர் வியாபாரம் செய்கிறார். அவரது வியாபாரத்தில் குறைந்த லாபம் வருகிறது. அதனால் வீட்டில் பொருளாதாரக் கஷ்டம். ஆடம்பரமாகச் செலவு செய்ய முடியவில்லை. வியாபாரத்தில் நியாயமாக நடக்க வேண்டுமா, அல்லது பொய் சொல்லி வியாபாரம் செய்து லாபத்தை பெருக்க வேண்டுமா? அதனால் தனது பொருளை வாங்குகிறவர்களுக்கு அநியாயம் செய்ய நேரிடுமே?

இப்போது பொறுமையுடன், கஷ்டங்களை சகித்துக் கொண்டு, வியாபாரம் நன்றாக நடக்கும் வரை காத்திருப்பதா, அல்லது உலக அடிப்படையில் எல்லோரையும் போல் வியாபாரத்தில் பொய் சொல்வதா? இதுதான் சோதனை. இறைவன் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்ற இறை அச்சம் இருக்குமானால் பொய் சொல்ல மாட்டார்கள். இது தான் தியாகம். உயிரைவிடுவது அடுத்தவரைக் கொல்வது தியாகம் இல்லை. பொறுமையாக இருந்தார்கள் என்றால், வியாபாரத்தில் ஞானங்கள் பெருகும். யாருக்கும் இல்லாத ஞானங்கள் பெருகும். அதுதான் வியாபாரத்திற்குத் தேவை. அவசரப்படுபவர்கள், இதற்கெல்லாம் கடவுளை நம்பினால் நடக்குமா? என்று தவறு செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். அதன் பின்பு நானும்ன் கடவுளை நம்புகிறேன் என்று எவ்வாறு சொல்ல முடியும். இவர்கள் சடங்குகளை நம்புகிறார்கள். நான் யாத்திரை போனேன், நான் நூறு முறை சுற்றி வந்தேன், தாடி வளர்த்தேன், மொட்டை போட்டேன் என்று சொல்லலாம். ‘மழித்தலும் நீட்டலும் வேண்டாம். உலகம் பழித்தது ஒழித்து விடின்’.

விதவிதமான நிறங்களில், ஆடைகளை அணிவதெல்லாம் சடங்குகள் தாம். மனம் தூய்மையாய் இருக்கிறதா, சொல்கிறபடி பேசுகிறபடி வாழ்கிறாரா என்பது முக்கியம். ஊருக்கு உபதேசம் சொல்ல வேண்டாம். தாழ் வாழாமல், அதை பிறருக்கு கற்பிக்க வேண்டாம். இறைவன் கோபம் கொள்வான்.

நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பதால் கடவுளுக்கு ஏதோ உபகாரம் செய்துவிட்டதாக ஆம் கருதக் குடாது. இறை நம்பிக்கையை நமக்களிப்பது இறைவன் தான். இதன் மூலம் இறைவன் தான் நமக்கு உபகாரம் செய்திருக்கிறான். நேர்வழியில் செல்வதால் நமக்குத்தான் நன்மை. நம் மனத்தின் எண்ணத்தை, இறைவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். நம்மைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறான். நோய் கொண்டிருக்கும் போதும், வறுமை வரும் போதும், நாம் மீள்வதற்கு இறை நம்பிக்கை அவசியம். கடைசியாக மரண வேதனை வரும் போது, மனிதன் சத்தியத்தை பேசுகிறான்.

வானத்திலிருந்து மழையைக் கொண்டு இறைவன் தூய்மையான நீரை இறக்கி வைக்கிறான். அந்த மழைதான் நமக்கு உணவைக் கொண்டு வருகிறது.

வளமான பூமியை மனிதன் அழித்துவிட்டான். செயற்கை ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லி மருந்துகளும் மண்ணை மலடாக்கி விட்டன. பெய்யும் மழை வெள்ளமாக பெருக்கெடுத்து அந்த வயற்காட்டை எல்லாம், விளை நிலங்களையும் தூய்மைப்படுத்துகிறது.

விவசாயிகள் அழிகிறார்கள் அல்லது இவர்கள் செய்த அநியாயம் நீக்கப்படுகிறதா?

கடற்கரை மாசுபடுத்தப்படுகிறது. அந்த அளவுக்கு கடற்கரை அசுத்தமாக இருக்கிறது. 5 நாள் பெய்த பெருமழைக்குப் பிறகு கடற்கரை மணல் சுத்தமாக இருக்கிறது. மனிதர்கள் சுத்தமாக்க மாட்டார்கள். இறைவன் சுத்தமாக்குவான்.

ஞானம் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். இறைவன் கொண்டு வரும் மழையில் அநியாயம் அழிக்கப்படுகிறது. ஆனால் விளைச்சல் பெருகி உணவுப் பொருள்கள், காய்கறிகள் விலை குறைந்து மனித சமுதாயத்துக்கு நன்மை கிடைக்கிறது. இறைவன் ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டான்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com