தீபாவளி சமயத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்கான சிகிச்சைக்களுக்காக அவரச தொலைபேசி எண்ணை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனையின் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி சமயத்தில் ஏற்படும் பட்டாசு விபத்தால் கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் காயங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. சிறிய அலட்சியம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பட்டாசு விபத்தால் கண்களில் ஏற்படும் நோய்த்தொற்று மற்றும் காயங்களுக்கு சரியான சமயத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வைக் குறைபாடு அல்லது பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கண்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தீபாவளி சமயத்தில் கண்களில் ஏற்படும் அனைத்து விதமான காயங்களுக்கும் 24 மணி நேர சிகிச்சையை அளிக்கும்.
கண்ணில் ஏற்படும் காயங்களுக்கு 044 - 28112811 என்ற அவசர தொலைபேசி சேவை எண்ணைத் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம், அவசர மருத்துவ உதவி உள்ளிட்டவற்றைப் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.