சிறுநீரக கல் கரைய, சிறு நீரக வியாதிகள் தீர, உடல் வீக்கம் மற்றும் குடல் புண்கள் குணமாக 

வாழைப் பூ நீராவியில் வேக வைத்தது (100 கிராம்), வாழைத் தண்டு பொடியாக நறுக்கியது
சிறுநீரக கல் கரைய, சிறு நீரக வியாதிகள் தீர, உடல் வீக்கம் மற்றும் குடல் புண்கள் குணமாக 

வாழைப் பூ + வாழைத்தண்டு கலவை

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  இ , கே )

தீர்வு : வாழைப்பூ நீராவியில் வேக வைத்தது (100 கிராம்), வாழைத் தண்டு பொடியாக நறுக்கியது (50 கிராம்), முள்ளங்கி  (50 கிராம்), காரட் (50 கிராம்), மோர் (300 மி.லி), உப்பு (தேவையான அளவு)

செய்முறை : முதலில் வாழைப்பூ, வாழைத்தண்டு, முள்ளங்கி, கேரட், ஆகியவற்றை பொடியாக நறுக்கி அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் மிளகு, பெரிய வெங்காயம் சேர்த்து தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரவும்

பயன்கள் : சிறுநீரக கல், சிறுநீரக வியாதிகள் தீரும், உடல் வீக்கம், குடல் புண் குணமாகும். குடல் புற்றுநோய், குடல்வால் நோயினால் பாதிக்கபட்டவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் உடனடி பலன் கிடைக்கும். மேலும் உடல் பருமனை குறைக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து  உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.


கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி வைத்தியர்
அலைபேசி : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com