திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்படும் மின் தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது பல பகுதிகளில் மின் தடை ஏற்படும். இதனை பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ்ஸில் தெரிவிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
திடீரென ஏற்படும் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகாமல் தடுக்கும் வகையில் கேரள மாநில மின்சாரத் துறை சார்பில், பொதுமக்களுக்கு அந்தந்தப் பகுதிகளில் செய்யப்படும் மின் தடை குறித்து எஸ்எம்எஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை 25ம் தேதி, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைக்க உள்ளார்.