புதுதில்லி: குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொருத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.
இதையடுத்து விஐபி-கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.