சிவப்பு சுழல் விளக்கு பொருத்த விஐபி-களுக்கு அனுமதி இல்லை: மத்திய அரசு திட்டம்

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு

புதுதில்லி: குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொருத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 1 முதல் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.

இதையடுத்து விஐபி-கள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்து சிவப்பு சுழல்விளக்கு அகற்றப்படும் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com